- வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
பஞ்சாங்கத்தின் பெருமை!
இவை ஐந்தும், நாம் கண்ணால் காணுகின்ற சூரியன், மற்றும் சந்திரனோடு தொடர்புடையவை. திதி என்றால் என்ன? விண்வெளியில் சந்திரன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும், சூரியன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவே திதியாகும். திதியின் பெயர்கள் என்ன? 1. பிரதமை, 2. துவிதியை, த3. ிருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி மற்றும் 14. சதுர்த்தசி.
இவை அனைத்தும், வளர் பிறைக்கும், தேய் பிறைக்கும் பொதுவானவையாகும். வளர்பிறையில், 15வது திதியாக வருவது பௌர்ணமி. தேய் பிறையில் 15வது திதியாக வருவது அமாவாசை. வளர் பிறை என்பதை சுக்கில பட்சம் என்றும், தேய்பிறை என்பதைக் கிருஷ்ண பட்சம் என்றும் கூறுவார்கள். நாம் கொண்டாடும் பண்டிகைகள் யாவும் திதிகளின் அடிப்படையில்தான் கொண்டாடப்படுகின்றன.
உதாரணத்திற்கு அட்சய திருதியை, பிள்ளையார் சதுர்த்தி, நாக பஞ்சமி, கந்த சஷ்டி, ரத சப்தமி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ராம நவமி, விஜய தசமி, வைகுண்ட ஏகாதசி, அதனைத் தொடர்ந்து வரும் துவாதசி, நரக சதுர்த்தசி இப்படிப் பல பண்டிகைகளைக் கொண்டாட வழி காட்டுவது திதி. இந்தத் திதியை அறிந்து கொள்ளப் பஞ்சாங்கம் அல்லது நாம் பயன்படுத்தும் நாட்காட்டி உதவும்.
ஜோதிடர். திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்.
Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

